இந்திய கலை உலகில் புதிய சாதனையை படைத்து, ராஜா ரவி வர்மா வரைந்த புகழ்பெற்ற ‘யசோதா மற்றும் கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167.20 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை டாக்டர் சைரஸ் எஸ். பூனாவாலா வாங்கியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற Saffronart Spring Live Auction ஏல நிகழ்ச்சியில் இந்த சாதனை விற்பனை நடைபெற்றது. கடும் போட்டிக்குப் பிறகு ‘யசோதா மற்றும் கிருஷ்ணா’ ஓவியம் சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ரூ.167.20 கோடிக்கு விற்கப்பட்டது.
இந்த ஓவியத்தை வாங்கிய டாக்டர் சைரஸ் பூனாவாலா, Serum Institute of India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படும் அவர், கலை மற்றும் பாரம்பரிய படைப்புகளின் சேகரிப்பிலும் ஆர்வம் கொண்டவர்.
இந்த ஏல விற்பனை மூலம் இந்திய நவீன கலை வரலாற்றில் புதிய சாதனை உருவாகியுள்ளது. இதற்கு முன்பு எம்.எஃப். ஹுசைன் வரைந்த ‘Untitled (Gram Yatra)’ ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்கப்பட்டதே இந்தியாவில் அதிக விலைக்கு ஏலமான ஓவியமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ராஜா ரவி வர்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது.
இந்த சாதனை விற்பனை இந்திய பாரம்பரிய கலைப்படைப்புகளின் உலகளாவிய மதிப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக கலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
