மெட்ரோ ரயிலில் பாட்டு கேட்டால்…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம் – பயணிகள் அதிர்ச்சி

0
4

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது ஒழுங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மொபைல் போனில் சத்தமாகப் பேசுதல், ஸ்பீக்கர் மோடில் உரையாடல் நடத்துதல், ஹெட்போன் இல்லாமல் வீடியோ பார்ப்பது போன்ற செயல்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் அமைதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டின் மெட்ரோ ரயில் இயக்கச்சட்டத்தின் கீழ், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பது குற்றமாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், பயணத்தின் போது ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சமீப காலமாக, மெட்ரோ ரயில்களில் மொபைல் பயன்பாட்டின் மூலம் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக பல புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த புதிய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், அவசர சூழ்நிலையில் அவர்கள் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

பயணிகள் அனைவரும் பொது இடங்களில் ஒழுங்கையும் மரியாதையையும் கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம். பயணத்தின் போது ஹெட்போன்களைப் பயன்படுத்துதல், மொபைல் அழைப்புகளை மெதுவாக பேசுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.