500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவசம்: தமிழக அரசு புதிய அரசாணை

0
1

500 யூனிட் வரை மின்தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளை பயன்படுத்தும் மக்களுக்கு முக்கிய நிவாரணமாக புதிய மின்சார மானிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 500 யூனிட்களுக்கு உட்பட்டு மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட்கள் வரை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் 100 யூனிட்கள் இலவசமாக கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் மூலம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோடைகாலங்களில் அதிக மின்சார பயன்பாடு காரணமாக உயர்ந்த கட்டணத்தை சந்தித்து வந்த பொதுமக்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 200 யூனிட் மின்சார மானிய திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.1,730 கோடி கூடுதல் செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் மின்சார கட்டண சுமை குறையவுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த மானிய திட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறித்து விரைவில் விரிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவசம்: தமிழக அரசு புதிய அரசாணை