தேனி மாவட்டத்திற்கு மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார்.
வீரபாண்டியில் அமைந்துள்ள Veerapandi Gowmariamman Temple கோயிலின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 30ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
