கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா?

0
12

பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஒரு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், அதிகளவில் பணம் விநியோகம் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக பிரபலர தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் போட்டியும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் திமுகவினர் ஒரு ஓட்டுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வரை தருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பகுதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

இதனிடையே, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அதேபோன்ற சூழ்நிலை தற்போது உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மொத்தத்தில், இந்த விவகாரம் தேர்தல் சூழ்நிலையை பதற்றமாக மாற்றியுள்ள நிலையில், அதிகாரிகளின் இறுதி முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.