விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்திய அரசு புதிய முயற்சியாக ‘உத்யமி மித்ரா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருமானத்தை அதிகரிக்க விரும்புவோருக்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, கால்நடை பண்ணைகள் அமைப்பதற்காக ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றும், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர்களுக்கு இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
Udyami Mitra தளத்தின் மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து, திட்டத்திற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். தகுதியுடையவர்கள் ஆன்லைன் வழியாக எளிதாக விண்ணப்பித்து மானியம் பெறலாம்.
இந்த திட்டம் மூலம் கால்நடை வளர்ப்பை ஒரு லாபகரமான தொழிலாக மாற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது. விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வருமானத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து, அதிகமானோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உதவுங்கள்.





