Madurantakam வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நல அலுவலராக பணிபுரிந்து வந்த விஜயலட்சுமி என்பவர், ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக Directorate of Vigilance and Anti-Corruption போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chengalpattu மாவட்டம் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறையின் கீழ் ஊர்நல பணியாளராக விஜயலட்சுமி பணியாற்றி வந்தார். இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் போடப்பட்டிருந்த வைப்புத் தொகையை புதுப்பித்து (Renewal) வழங்குவதற்காக அவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரியனூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி, புகார்தாரரிடம் ரசாயனப் பொடி தடவிய நோட்டுகளை வழங்கி, அதிகாரியிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இன்று அலுவலகத்தில் விஜயலட்சுமி லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த நடவடிக்கையை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர்கள் திருவேங்கடம் மற்றும் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
