12ஆம் வகுப்பு 100% தேர்ச்சி.. செங்கல்பட்டு கலெக்டர் பாராட்டு

0
2

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எஸ். மாலதி ஹெலன் கலந்து கொண்டு, சிறப்பான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களையும் அவர் பாராட்டினார். தொடர்ந்து, மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்க பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள், கல்வித் துறையில் மேலும் சிறந்த சாதனைகளை உருவாக்க ஊக்கமாக இருக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.