கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

0
1

தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சி, தமிழக பொறுப்பு கவர்னருக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கவர்னர் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், ஜனநாயக மரபுகளை மதிக்காமல் ஆட்சி அமைப்பில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையகங்களில் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டங்களில் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பைச் சுற்றியுள்ள அரசியல் பரபரப்புக்கு மத்தியில், காங்கிரஸின் இந்த அறிவிப்பு புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.