2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) கட்சிக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து அவர் அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து, கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைகள் முடிந்த பிறகு, அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





