Home செங்கல்பட்டு 10ம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டு மாவட்டம் அசத்தல்.. 92.15% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 31வது இடம்!

10ம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டு மாவட்டம் அசத்தல்.. 92.15% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 31வது இடம்!

0

தமிழகத்தில் வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் செங்கல்பட்டு மாவட்டம் சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான தேர்வில் 92.15 சதவீத தேர்ச்சி பெற்று, கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் முன்னேறி மாநில அளவில் 31வது இடத்தை செங்கல்பட்டு மாவட்டம் பிடித்துள்ளது.

இந்தாண்டு மாவட்டம் முழுவதும் மொத்தம் 29,941 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இதில் 27,590 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவிகளை விட மாணவர்கள் குறைவாக இருந்த நிலையில், மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று மீண்டும் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் உள்ள 364 பள்ளிகளில் 114 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று பாராட்டைப் பெற்றுள்ளன. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இந்த ஆண்டு சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செங்கல்பட்டு மாவட்டம் மாநில தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறியிருப்பது கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் சிறந்த இடத்தைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றனர்.

NO COMMENTS

Exit mobile version