Home செங்கல்பட்டு தவெக அரசுக்கு எதிராகத்தான் ஓட்டு – அதிமுக கொறடா அதிரடி!

தவெக அரசுக்கு எதிராகத்தான் ஓட்டு – அதிமுக கொறடா அதிரடி!

0

சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “எங்கள் அணி தவெக அரசுக்கு எதிராகவே வாக்களிக்கும்” என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவில் பிளவை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பிரதான அதிமுக அணி தனது வியூகத்தை மாற்றியுள்ளது. இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.

சி.வி.சண்முகத்தின் ஆதரவு அறிவிப்புக்குப் பிறகு அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நிலவிய குழப்பங்களுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி முற்றுப்புள்ளி வைத்தார். நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மக்கள் நலனில் அக்கறையில்லாத கூட்டணியுடன் தவெக கரம் கோர்த்திருப்பதாகவும், எனவே இந்த அரசைத் தாங்கள் ஆதரிக்கப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சி.வி.சண்முகம் பிரிவு ஏற்கனவே தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ள சூழலில், கொறடாவின் இந்த உத்தரவு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொறடாவின் உத்தரவை மீறி வாக்களிக்கும் எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்தாலும், சி.வி.சண்முகம் அணியின் ஆதரவு மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் முதல்வர் விஜய் தனது பெரும்பான்மையை எளிதாக நிரூபிப்பார் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே தங்களது கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில், நாளை நடக்கவிருக்கும் இந்த ‘அக்னிப் பரீட்சை’ தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும். அதிமுகவின் இந்த ‘எதிர்ப்பு’ முடிவு, முதல்வர் விஜய்யின் அரசுக்கு எத்தகைய சவாலை ஏற்படுத்தும் என்பது நாளை தெரிந்துவிடும்.

“அதிமுகவின் ஒரு பிரிவு ஆதரவு, மற்றொரு பிரிவு எதிர்ப்பு” என அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், நாளை நடக்கும் வாக்கெடுப்பு தவெக-விற்குச் சாதகமாகவே அமையும் எனத் தோன்றுகிறது.

NO COMMENTS

Exit mobile version