Home Trending/Viral Viral ChatGPT உருவாக்கிய ரூ.69,000 போலி செக்! வங்கி மோசடி அபாயம்!

ChatGPT உருவாக்கிய ரூ.69,000 போலி செக்! வங்கி மோசடி அபாயம்!

0

“நம்ம நிலைமை எல்லாம் அவ்வளவுதானா?” (We are so cooked) என்று இணையவாசிகள் அலறும் அளவிற்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தொழில்நுட்ப உலகில் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT 2.0, சுமார் 69,000 ரூபாய்க்கான வங்கி காசோலையை (Cheque) அப்படியே தத்ரூபமாக வடிவமைத்துக் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அறிமுகமான ChatGPT-யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு, வெறும் உரையாடல்களைத் தாண்டி, ஒரு வங்கி காசோலையில் இருக்க வேண்டிய எழுத்துருக்கள் (Fonts), கையொப்பம் மற்றும் பாதுகாப்பு குறியீடுகள் என அனைத்தையும் அச்சு அசலாக வடிவமைத்துள்ளது. ஒரு பயனர் சோதனை முயற்சியாகக் கேட்ட கேள்விக்கு, AI வழங்கிய இந்தத் துல்லியமான காசோலை, வங்கி மோசடி பேர்வழிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி அதிகாரிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இத்தகைய தத்ரூபமான போலி ஆவணங்களை மனிதக் கண்களால் கண்டறிவது கடினம் என்றும், இது டிஜிட்டல் வங்கிப் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவால் என்றும் எச்சரிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் “AI-ன் வளர்ச்சி மிரட்டலாக இருக்கிறது” என்றும், “இனி காகிதக் காசோலைகளின் காலம் முடிந்துவிட்டது” என்றும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இருப்பினும், OpenAI நிறுவனம் இதுபோன்ற சட்டவிரோத ஆவணங்களை உருவாக்குவதைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகளை (Safeguards) விதித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், தொழில்நுட்பம் தவறான கைகளில் சென்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் “இனி நம்ம நிலைமை அவ்வளவுதான் போல!” என்ற ரீதியில் மீம்களும் கவலைகளும் ஒருசேரப் பகிரப்பட்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version