Sunday, April 12, 2026
AdvertismentGoogle search engineGoogle search engine
Home செங்கல்பட்டு செங்கல்பட்டில் நவீன விளையாட்டுத் திடல் – திட்ட மதிப்பீடு இவ்வளவா?

செங்கல்பட்டில் நவீன விளையாட்டுத் திடல் – திட்ட மதிப்பீடு இவ்வளவா?

0
5

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைக்கப்பட உள்ள நவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டின்னார்.

செங்கல்பட்டு அருகே வேண்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக ரூ.15 கோடி மதிப்பில் அதிநவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை அப்பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பில் 400 மீட்டர் ஓடுதளம், சர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தும் வகையில் மைதானம், 50 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளம், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் இறகுப் பந்து போட்டிகள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி வசதிகளுடன் கூடிய அதிநவீன விளையாட்டு திடல் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும், கலைஞர் திட்டத்தின்கீழ் 33 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here